Saturday, January 29, 2011

அன்பு வணக்கங்கள்

சர்வதேச தரத்திலான இணைய சஞ்சிகை ஒன்றை இணையத்தமிழ் வாசகர்களுக்கு கொண்டுவரும் பொருட்டு, சமுகத்தின் பலதரப்பட்ட மேலோரின் அபிப்பிராயங்களினூடான ஒரு அறிவுப்பயணமாக எமது "நிதானம்" எனும் தமிழ் இணைய சஞ்சிகை மிக விரைவில் முழுப்பொலிவுடன் இலவசமாக உங்கள் இரசனைக்கும், அறிவுக்கும் பெருவிருந்தாக வரவுள்ளதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வெறுமனே புதினங்களைத்தரும் ஒரு செய்தித்தளமாக இல்லாமல், தமிழ் இணைய வாசிப்புத்தேடல்கள் உள்ளவர்களுக்கு பலதரப்பட்ட செய்திகளையும் இணையமூடாக காவிவரும் ஒரு இணையத்தொகுப்பாகவும், வெகுவிரைவிலேயே அச்சு சஞ்சிகையாகவும் வரவுள்ள அதேவேளை, வெறும் எழுத்துக்களுடன் மட்டுப்படுதப்படாது, கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கான ஒரு களமாக இருக்கப்போவதுடன், சமூக மேம்பாட்டிற்காக பல செயற்திட்டங்களை முன்னெடுக்கவும், "நிதானம் பவுண்டேசன்" அமைப்பு செயல்திட்டங்களை கொண்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.

"நிதானத்தின் மிக நேர்த்தியான யதார்த்தமான, உலகப்பார்வையுள்ள பயணத்தில் எம்முடன் நிதானமாகவே தாங்களும் கரம்கோர்த்து எமது சமுதாய முன்னேற்றத்திற்கும், கலைஞர்களின் கௌரவிப்புக்களுக்கும் உறுதுணை நிற்பீர்கள் என நம்புகின்றோம்.

யாவரையும் அன்புக்கரத்துடன் அழைக்கின்றது நிதானம்.

என்றும் அன்புடன் நிதானம் நிர்வாகக்குழுவினர்.
யாழ்ப்பாணம் - இலங்கை.
சென்னை - தமிழ்நாடு
இலண்டன் - பிரித்தானியா